எங்கள் மீது அதிமுகவுக்கு கரிசனம் தான்.!! திருமாவளவனின் தடாலடி பேச்சு.!!
AIADMK worried about VCK
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எங்கள் கூட்டணிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி வந்தால் வரவேற்பும் என தெரிவித்திருந்தார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியை தலைவர் திருமாவளவனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது பேசிய அவர் கூட்டணியில் இல்லாத கட்சி தலைவர்களை பிரதமர் மோடி புகழ்ந்து பேசுவது அந்த தலைவர்கள் மீது உள்ள நன்மதிப்பை போற்ற அல்ல. மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவை புகழ்ந்து பேசுவது பாஜகவின் பலவீனத்தை காட்டுகிறது. இது தமிழ்நாட்டு அரசியலை புரட்டிப் படும் முயற்சி எச்சரிக்கையாக இருக்க வீசிக்க வேண்டுகோள் விடுகிறது.
திமுக விசிக இடையே எந்த மனக்கசப்பும் இல்லை கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தவிர்க்க முடியாத சில காரணங்களால் திமுக கூட்டணி பேச்சு வார்த்தையில் பங்கேற்க முடியவில்லை. எங்கள் மீது அதிமுக கரிசனம் கொண்டிருப்பது உண்மைதான்" என பதிலளித்துள்ளார்.