மதவாத, ஜாதி அரசியலுக்கு மக்கள் ஆதரவு தந்ததில்லை.!! - ஜெயக்குமார், அதிமுக.!! - Seithipunal
Seithipunal


தேனி தொகுதி பாஜக கூட்டணி வேட்பாளர் டிடிவி தினகரன் ஆதரித்து பிரச்சாரம் செய்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 2024 ஆம் ஆண்டு மக்களவை பொது தேர்தலுடன் அதிமுக காணாமல் போகும் என விமர்சனம் செய்தார். அதிவேலையில் ஜூன் 4ம் தேதிக்கு பிறகு அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் டிடிவி தினகரன் பக்கம் செல்வார்கள் என பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது "வரலாறு தெரியாமல் அண்ணாமலை பேசுகிறார். பாஜக ஒரு மதவாத கட்சி. ஒரு கொள்கையும் கிடையாது, ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது. அதீத கற்பனையில் அண்ணாமலை பேசி வருகிறார்.

கற்பனை கதைகளை கூறும் அண்ணாமலை நல்ல கதாசிரியராக செல்லலாம். அண்ணாமலை அரசியலில் ஒரு அறியா பிள்ளை. தமிழகத்தில் மதவாதம் ஜாதியா அரசியலுக்கு எப்போதும் மக்கள் ஆதரவு தந்ததில்லை. டிடிவி தினகரன் மற்றும் பாஜக இடையே என்ன ரகசியம் ஒப்பந்தம் உள்ளது என்று தெரியவில்லை. யாருக்கு வெற்றி வாய்ப்பை தர வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்" என பதிலடி கொடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aiadmk jayakumar said people not support regional caste politics


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->