"முன்னறிவிப்பும், முன்னேற்பாடும் இல்லாத முட்டாள் அரசு".. கடுமையாக தாக்கிய ஜெயக்குமார்.! - Seithipunal
Seithipunal


அரசுக்கும், ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கும் இடையே மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கும் நிலையில், அப்பாவி பயணிகள் தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கிளாம்பாக்கமா? கோயம்பேடா?  பிரச்சனையில் சுமூக தீர்வு கண்டு பொதுமக்களுக்கு இடைஞ்சல் இல்லாத போக்குவரத்து வசதியை தமிழக அரசு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சத்தானது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் ”தொடர் விடுமுறையால் 50,000-க்கும் மேற்பட்ட மக்கள் பேருந்துகள் முன்பதிவு செய்து கோயம்பேடு வந்தடைந்துள்ள வேளையில் காவல்துறையை வைத்து பேருந்துகள் உள்ளே-வெளியே செல்ல இயலாத வகையில் தடுப்புகளை அமைத்துள்ளனர்.

முன்பதிவு செய்து பேருந்து நிலையம் வந்த பயணிகளை 'உள்ளே போகாதீர்கள்!பேருந்து இங்கிருந்து இயங்காது! ஊருக்கு செல்ல வேண்டும் என்றால் கிளாம்பாக்கம் செல்லுங்கள்'..என மக்களை குழப்பத்திற்கு ஆளாக்கி மிரட்டி வருகின்றனர். இந்த அரசு மக்களை பாதிப்புக்குள்ளாக்க வேண்டும் என திட்டமிட்டே இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. கருணாநிதி பெயரில் கட்சி சின்ன வடிவில் பேருந்து நிலையம் கட்டினால் போதாது.

அடிப்படை வசதிகள் வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கை. திமுக எம்எல்ஏ மகன் மற்றும் மருமகளை இன்னும் பிடிக்க முடியவில்லை. அப்பாவி மக்களையும் ஆம்னி பேருந்து உரிமையாளர்களையும் மிரட்ட 500 போலிஸ் குவிப்பு. முன்னறிவிப்பும் முன்னேற்பாடும் இல்லாத முட்டாள் அரசு" என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

aiadmk jayakumar criticized dmk govt kilambakkam bus stand


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->