எடப்பாடியாரை முதல்வராக்குவோம் 'சீச்சீ, சீச்சி' ஸ்டாலினை முதல்வராக்குவோம்.! திமுகவில் இணைந்ததும் உளறிய லட்சுமணன்.!
aiadmk ex mp laxhmanan press meet speech
அதிமுகவின் விழுப்புரம் முன்னாள் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்பியுமான லட்சுமணன் இன்று திமுகவில் இணைந்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முக ஸ்டாலின் முன்னிலையில் லட்சுமணன் திமுகவில் இணைந்தார். அப்போது திமுக பொருளாளர் துரைமுருகன், முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த லட்சுமணன் பேசியதாவது, “தமிழகத்தில் வலுவான அரசு அமைய வேண்டிய தேவை இருப்பதால் தான் திமுகவில் இணைந்தேன். விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுகவினரை ஒருங்கிணைக்க அமைச்சர் சி.வி.சண்முகம் முறையாக செயல்படவில்லை என்றும் திமுகவில் இணைந்து பாடுபட வாய்ப்பளித்ததற்கு கழக தலைவர் ஸ்டாலினுக்கும், இளைஞரணி செயலளார் உதயநிதிக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
மேலும், வருகின்ற 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அண்ணன் எடப்படியாரை முதல்வராக.. என்று கூறினார், அதன் பின்னல் இருந்தவர்கள் ஸ்டாலின், ஸ்டாலின் என கூற பின்பு சுதாரித்து கொண்டு தலைவர் ஸ்டாலினை முதல்வராக்குவோம் என பதற்றத்துடன் கூறி அங்கிருந்து விடைபெற்றார். இது அங்கிருந்தவர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
English Summary
aiadmk ex mp laxhmanan press meet speech