மீண்டும் பிரசாந்த் கிஷோருடன் இணையும் மம்தா பானர்ஜி.! ஆனால், ஒரு டிவிஸ்ட்.!
again mamata banarjee join with prasanth kishore
பிரபல ஐ பேக் நிறுவனத்தின் தேர்தல் வியூக வகுப்பாளராக இருப்பவர் பிரசாந்த் கிஷோர். இவர் பல அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் காலங்களில் வெற்றி வாய்ப்பை ஈட்டி கொடுப்பதில் வல்லுனராக இருந்து வருகிறார்.
பஞ்சாப் காங்கிரஸ், பாஜக, திரிணாமுல் காங்கிரஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளுக்கு அவர் ஆலோசனை வழங்கியுள்ளார். இத்தகைய நிலையில், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி மீண்டும் பிரசாந்த் கிஷோருடன் ஒப்பந்தம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் கட்சியின் உள்விவகாரங்களில் பிரசாந்த் கிஷோர் தலையிடாமல் இருந்துகொண்டு ஆலோசனைகளை மட்டும் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்ட இருக்கிறதாம்.
இதற்கு காரணம், சமூக ஊடக தளத்தில் மம்தாவின் அனுமதி பெறாமல் உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர் பட்டியலை ஐபேக் நிறுவனம் வெளியிட்டதை தொடர்ந்து அவரை உள் விவகாரங்களில் தலையிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மம்தா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வியூகம் வகுத்து கொடுத்தவர் பிரசாந்த் கிஷோர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
again mamata banarjee join with prasanth kishore