சசிகலாவை சந்தித்த ஓபிஎஸ் சகோதரர்..பிண்ணனி என்ன..அதிமுகவினரிடையை சலசலப்பு.! - Seithipunal
Seithipunal


சசிகலாவை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வத்தின் சகோதரர் ராஜா திடீரென சந்தித்தால் அதிமுகவினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முன்னாள் அதிமுக ஒருங்கிணைப்பாளர் சசிகலா இரண்டு நாள் பயணமாக தென் மாவட்டங்களுக்கு செல்வதாக அறிவித்தார். சென்னையிலிருந்து புறப்பட்ட அவர் ஆன்மீகம் பயணம் சார்ந்ததாகவும், கட்சி சார்ந்த கூட்டம் இல்லை எனவும் அறிவித்திருந்தார்.

ஆனால் அவருக்கு நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிலையில் திருச்செந்தூரில் சசிகலாவை, ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.

தேனி மாவட்ட அதிமுகவினர் சசிகலாவை கட்சியில் சேர்க்க கோரி தீர்மானம் நிறைவேற்றி நிலையில் இந்த சந்திப்பு முக்கியம் வாய்ந்ததாக கூறப்படுகிறது.

கோவையில் முன்னாள் அதிமுக ஆறுகுட்டியும் சசிகலாவை அதிமுகவில் இணைக்க வேண்டும் என வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதைத்தொடர்ந்து இது தொடர்பாக ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தனியாக ஆலோசனை நடத்தினர்.

இந்த நிலையில் ஓபிஎஸ் சகோதரர் சசிகலாவை சந்தித்து பேசியிருப்பது அதிமுக தொண்டர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK O Raja meet vk Sasikala


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->