நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்.. கோவை ஆட்சியர் அலுவலகத்தில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கையில் வருகின்ற 22ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நேற்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்தது. 

தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் காலை முதல் மாலை 6 மணி வரை தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு வேட்டையில் ஈடுபட்டனர். 

இந்நிலையில், கோவை ஆட்சியர் அலுவலகத்தில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நியாயமாக நடத்தக்கோரி தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுகவினருக்கு ஆதரவாக கோவை மாவட்ட காவல்துறையினர் செயல்படுவதாகவும், துணை ராணுவப் படை பாதுகாப்புக்கு உத்தரவிடக்கோரியும் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்ய கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியத்தவது, கோவை மாவட்டத்தை கலவர பூமியாக மாற்ற முயற்சி நடைபெறுகிறது. ரவுடிகளை வெளியேற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணியில் துணை ராணுவத்தினரை ஈடுபடுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk mlas protest in kovai


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->