அறிவிக்கப்படாத முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.. அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி.! - Seithipunal
Seithipunal


உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தின் அறிவிக்கப்படாத முதலமைச்சராக பதவி வகித்து வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, சொத்து வரி உயர்வு மற்றும் மின்கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து அதிமுகவினர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சி அலுவலகம் எதிரே அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர் இந்தியாவிலேயே 520 வாக்குறுதிகளை கொடுத்தது ஒரே கட்சி திமுக மட்டும் தான்தான். ஆனால், அதில் ஒன்றரை கூட ஒழுங்கா ஒழுங்காக நிறைவேற்றவில்லை.

அதேபோல், உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தின் அறிவிக்கப்படாத முதலமைச்சர் ஆக பதவி வகித்து வருகிறார். இதற்கு கருணாநிதி குடும்பத்தை விட மன்னார்குடி மாஃபியா கும்பமே மேல் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், திமுக ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுகளில் சொத்து வரி, வீட்டு வரி போன்று விலைவாசி என அனைத்தையும் உயர்த்தியுள்ளனர் என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK ex minister KC veeramani speech about udhayanithi Stalin


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->