சசிகலாவின் பலே திட்டம்.. அதிமுக முன்னாள் அமைச்சர் பரபரப்பு தகவல்.!! - Seithipunal
Seithipunal


சசிகலா தொடர்ந்து தொண்டர்களுடன் பேசி வரும் நிலையில், நேற்று முன் தினம் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சசிகலாவிடம் போனில் யாரும் பேசினால் இனி கட்சியில் இருந்து நீக்கப்படுவீர்கள். ஏற்கனவே பேசியுள்ள பலரின் ஆடியோவும் உறுதி செய்யப்படும் பட்சத்தில், அவர்களும் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்படுவார்கள் என அதிமுக தலைமை எச்சரித்துள்ளது.

இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நடந்த அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி, அதிமுகவில் குழப்பத்தை உருவாக்கி கட்சியை மெல்ல மெல்ல கைப்பற்றி விடலாம் என சசிகலா நினைக்கிறார். அவரது கனவு ஒரு போதும் பலிக்காது. தேர்தலுக்குப் முன்பு அரசியலை விட்டு ஒதுங்கிக் கொள்வதாக அறிவித்த சசிகலா, தற்போது தொலைபேசி மூலம் அதிமுக நிர்வாகிகளுடன் பேசி அனுதாபத்தைப் பெற்று கட்சியை கைப்பற்றி விடலாம் என திட்டமிட்டுள்ளார் .

அதிமுக தொண்டர்கள் ஒற்றுமையுடன் இருந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடிபழனிசாமி அவரின் வழிகாட்டுதலில் பெயரில் கட்சியை வலுவுடன் நடத்த தொண்டர்கள் தயாராக உள்ளனர். எனவே சசிகலாவின் இந்த திட்டம் நிறைவேறாது. ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் அதிமுகவின் பாதுகாவலராக உள்ளனர் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk ex minister kc veeramani says about sasikala


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->