அதிமுகவில் இருந்து 16 நிர்வாகிகள் நீக்கம்.. ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தென் சென்னை வடக்கு (கிழக்கு), செங்கல்பட்டு மேற்கு, நீலகிரி, தஞ்சாவூர் தெற்கு, திண்டுக்கல் மேற்கு மாவட்டங்களை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கி, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து சுயேட்சையாகப் போட்டியிடுகின்ற காரணத்தாலும், 

தென் சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டத்தைச் சேர்ந்த, C. திலகவதிபாபு (ஆயிரம்விளக்கு வடக்கு பகுதிக் கழக இணைச் செயலாளர்).

செங்கல்பட்டு மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த, A. கிருஷ்ண மூர்த்தி (22-ஆவது வார்டு) (பல்லாவரம் நகர புரட்சித் தலைவி பேரவை துணைத் தலைவர்) P. முத்துராமன் (23-ஆவது வார்டு) (பல்லாவரம் நகர எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர்), K. லட்சுமி (க/பெ. காசி, 27-ஆவது வார்டு) , M. ஆசியா (க/பெ. மகேந்திரன், 28-ஆவது வார்டு), P. லட்சுமி (க/பெ. பெருமாள், 28-ஆவது வார்டு).

நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த, R. நடராஜ் (மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளர்), S.M. சாதிக் (மாவட்ட சிறுபான்மையினர் நலப் பிரிவுப் பொருளாளர்), G. மகேஷ்குமார் (உதகமண்டலம் நகரக் கழகப் பொருளாளர்), N. வினோத்குமார், (உதகமண்டலம் நகர தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைச் செயலாளர்), R. லட்சுமி (க/பெ. ராஜா, உதகமண்ட லம் நகர 33-ஆவது வார்டு), S. சங்கீதா, (கோத்தகிரி பேரூராட்சி 10-ஆவது வார்டு), J. ராமசாமி, (கூடலூர் நகரக் கழக மாவட்டப் பிரதிநிதி).

தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த, S.K. அய்யப்பன் (கீழவாசல் பகுதி இலக்கிய அணிச் செயலாளர்), M. பெரியசாமி, (மாநகராட்சி 20-ஆவது வட்டக் கழகச் செயலாளர், கோட்டை பகுதி).

திண்டுக்கல் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த, R.V. ராஜேந்திரன், (திண்டுக்கல் மாநகராட்சி 25-ஆவது வட்டக் கழக மேலமைப்புப் பிரதிநிதி ) ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.

கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk 16 members dismissal for party


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->