லிஸ்ட் ரெடி.. இன்றே தேர்தல் ஒப்பந்தம்... ரகசியத்தை உடைத்த முக்கிய புள்ளி.!! - Seithipunal
Seithipunal


பாஜக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் பாஜக மேலிட பொறுப்பாளர்கள் அடங்கிய குழுவினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் நேற்று நள்ளிரவு ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்த பாஜக குழுவினர் கூட்டணி குறித்தான பேச்சுவார்த்தையை முடித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இன்று காலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளார். சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலக கமலாலயத்தில் இந்த ஆலோசனை நடக்கும்போதே திருச்சியில் உள்ள பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் பாலாஜியின் வீட்டில் டிடிவி தினகரனுடன் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் பாஜக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள புதிய நிதி கட்சியின் நிறுவனத் தலைவர் ஏசி சண்முகம் செய்தியாளர்கள் சந்தித்தபோது "பாஜக உடன் கூட்டணியிலுள்ள கட்சிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளனர். தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு இன்று மாலை அறிவிப்புகள் வெளியிடப்படும்.

அனைத்து கட்சிகளுடனும் இன்று மாலை தொகுதி பங்கீடு முடிவாகி கையெழுத்தாக இருக்கிறது" என தெரிவித்துள்ளார். பாஜக கூட்டணி பேச்சு வார்த்தையில் மும்மூருமாக ஈடுபட்டு வரும் இத்தகைய சூழலில் இன்று மாலைக்குள் தொகுதி பங்கீடு உருவாகி கையெழுத்தாகும் என ஏ.சி சண்முகம் தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ACshanmugam said NDA in tamilnadu finished today


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->