நடுரோட்டில் இளம்பெண்ணை துடிதுடிக்க வைத்த வாலிபர்.! வெளியான அதிர்ச்சி காரணம்.!! - Seithipunal
Seithipunal


ஓவியா ஆர் எஸ் புரம் பகுதியில் தனியார் கணினி பயிற்சி மையம் ஒன்றில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்நிலையில், நேற்று மாலை 7.30 மணியளவில் பயிற்சியை முடித்துவிட்டு திவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வெளியே வந்துள்ளார்.

அப்போது சுரேஷ் என்கிற இளைஞர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரை குத்திக் கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். திவ்யாவுடன் அருகில் இருந்த மாணவர்கள் நொடிபொழுதில் சுதாரித்து திவ்யாவை காப்பாற்றியிருக்கின்றனர்.

இந்த சம்பவத்தால் தடுக்க முயன்ற மாணவர்களும், திவ்யாவும் அதிர்ஷ்டவசமாக சிறு சிறு காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளனர். அவர்களுக்கு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. கொலை செய்ய முயற்சித்த சுரேஷ் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இதுகுறித்து ஆர் எஸ் புரம் காவல்துறையினர் விசாரித்ததில், 'கேரள மாநிலத்தைச் சேர்ந்த திவ்யாவும், சுரேஷும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இருவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால், சுரேஷிடம் பழகுவதை திவ்யா தவிர்த்துள்ளார். இதனால்தான் ஆத்திரம் அடைந்த சுரேஷ் திவ்யாவை கொலை செய்ய முயற்சித்துள்ளார். மேலும் திவ்யாவை கொலை செய்வதற்கு என்றே பிரத்யேகமாக அவர் தயார் செய்து கொண்டு வந்த கத்தி அது என்பது தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a young men try to murder in kovai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->