நாளை முதல் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை! தமிழக அரசு அறிவிப்பு!!
4 days leave for tasmac shop
நாங்குநேரி மற்றும் விக்ரவாண்டி சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல், அக்டோபர் 21-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இதற்காக அதிமுக மற்றும் திமுக கூட்டணி காட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நாங்குநேரி மற்றும் விக்ரவாண்டி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால், விக்ரவாண்டி சட்டமன்றத் தொகுதி மற்றும் நெல்லை மாவட்டத்தில் நாளை முதல் அக்டோபர் 21 ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதனை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அக்டோபர் 24ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூடவும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
English Summary
4 days leave for tasmac shop