நரம்புகள் புத்துணர்ச்சி பெற இந்த பானத்தை குடிச்சுப் பாருங்க!
Try this replenishing drink for refreshness
நம் உடலுக்கு நரம்பு மண்டலங்களின் செயல்பாடு மிகவும் முக்கியமானது. இதுதான் எல்லா உறுப்புகளையும் கட்டுப்படுத்தக்கூடிய முக்கிய மண்டலமாக செயல்படுகிறது. சில காரணங்களினால் நரம்பு மண்டலம் பாதிக்கப்படும். இவற்றை ஆரம்பத்திலேயே கண்டறிந்து குணப்படுத்துவதன் மூலம் இதனை சரி செய்ய முடியும். நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளை வீட்டிலேயே தயாரிக்கும் இந்த பானத்தின் மூலம் சரி செய்யலாம். அந்த பானத்தை எவ்வாறு தயாரிக்கலாம் என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
கிராம்பு - 2
இலவங்கப்பட்டை - 1
ஏலக்காய் - 2
வெல்லம் - 1 டீ.ஸ்பூன்
தண்ணீர- 200 மி.லி
செய்முறை:
ஒரு இடிக்கிற கல் எடுத்து அதில் ஏலக்காய் பட்டை மற்றும் கிராம்பு ஆகியவற்றைப் நன்றாக பொடி செய்து கொள்ளவும். அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 200 மில்லி மீட்டர் தண்ணீரை ஊற்றி நன்றாக கொதித்து 200 மில்லி லிட்டர் தண்ணீர் 150 மில்லி லிட்டராக வற்றியதும் பொடி செய்து வைத்ததை அதில் சேர்த்து சிறிது நேரம் மிதமான சூட்டில் விடவும். அதன் பிறகு ஒரு டீ.ஸ்பூன் வெல்லம் சேர்த்து கொதித்ததும் அடுப்பை அணைத்துவிட்டு இந்தக் கலவையை ஒரு பாத்திரத்தில் வடிகட்டி வெதுவெதுப்பான சூட்டில் இரவு உணவுக்குப் பின் அருந்தலாம்.
15 நாட்கள் தொடர்ந்து இந்த பானத்தை அருந்தி வர நரம்புகளில் ஏற்பட்டுள்ள அடைப்புகள் கை கால் வலி மற்றும் முதுகு வலியாகியவை குணம் பெறும் .
English Summary
Try this replenishing drink for refreshness