அதிக அளவில் உப்பு சாப்பிடுபவர்களா நீங்கள்? அப்போ இது உங்களுக்கு தான்.!
salt eat happens in tamil
அதிகமான உப்பு சேர்த்துக் கொள்வதால் மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம் போன்றவை ஏற்படும். சராசரியாக ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு 15 முதல் 20 கிராம் வரை உப்பு தேவைப்படுகிறது.
இனிப்புகள், காய்கறி, ஊறுகாய், எண்ணெய் உணவு வகைகளை வைத்து உப்பு கணக்கிடப்படுகிறது. அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால் அதிக அளவிலான உப்பு நமது உடலில் சேர்ந்து விடும்.
சோடியம் நமது உடலுக்கு மிகவும் அவசியமான ஒன்று. பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றில் அதிக அளவிலான சோடியம் உள்ளது.
அதனால் அதனை மிகவும் அளவாக சாப்பிட வேண்டும். அளவுக்கு மீறினால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். அதிக சோடியம் நமது உடலில் சேரும்போது நோய்கள் ஏற்படுவது போல குறைந்த சோடியம் காரணமாகவும் பிரச்சனைகள் உருவாகும்.
குழந்தைகள் பெரியவர்களாகவிட மிகக் குறைவான அளவு உப்பு உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். அதிக அளவிலான உப்பு உணவுகளை குழந்தைகளுக்கு கொடுப்பதால் மாரடைப்பு, இதயம் செயலிழப்பு போன்றவை ஏற்படும். மேலும் சிறுநீரகத்தில் திறன் பாதிக்கப்படும். பின்னடைவில் சிறுநீரக செயலிழப்பு ஏற்படும்.
English Summary
salt eat happens in tamil