கவலைகள் வாட்டி எடுக்குதா.? இப்படி செய்து சந்தோஷமாக இருங்கள்.!
How To handle sad Feelings
கவலை என்ற உணர்வை களைந்து மகிழ்ச்சியை பெற சில எளிய வழிகளை பார்ப்போம்.
1. ஒரு டைரியில் உங்களின் தற்பொழுது மகிழ்ச்சியற்ற சூழ்நிலைக்கு காரணம் என்ன என்று எழுதவும். எந்த விடயம் உங்கள் கவலைக்கு காரணமாக இருக்கிறது என்று எழுதவும். அந்த விஷயம் வாழ்க்கையில் நடந்தேறினால் நான் மகிழ்ச்சி அடைவேனா? என்று எழுதவும் இப்படி எழுதுவதால் உங்களுக்கு ஒரு தெளிவுக் கிடைக்கும்.
2) ஆக்கப்பூர்வமான செயல்கள் அல்லது ஒரு புது விடயத்தை கற்றுக்கொள்வதால் உங்கள் மனநிலை புத்துணர்வுக் கொள்ளும்.
3)மகிழ்வாக இருப்பதற்கு உங்களை முதலில் அனுமதியுங்கள். சிறு சிறு மகிழ்ச்சியான உணர்வுகள் தரக்கூடிய விருப்பமான உணவுகள், ஊர் சுற்ற செல்வது அல்லது உங்களுக்கு பிடித்த படங்களை காண்பது போன்றவற்றை மேற்கொள்ளுங்கள்.
4) உங்கள் மனக்கவலையைப் பகிர்ந்துக் கொள்ள நம்பத்தகுந்த, நேர்மறை எண்ணம் கொண்ட ஒரு நபரைத் தேர்ந்தெடுங்கள்.
5) இதுவும் கடந்து போகும் என்ற சொற்றொடரை மனதில் பதிந்து கொள்ளுங்கள். எந்த தருணமும் மாற்றம் கொள்ளும் நேரம் வந்தே தீரும் என்பது இயற்கை நியதியாகும். இதை முழுமையாக நம்புங்கள்.
English Summary
How To handle sad Feelings