ஒரு நாளைக்கு எத்தனை டீ குடிக்கலாம்? அதிகம் குடித்தால் என்னவாகும்? - Seithipunal
Seithipunal


மனதிற்கும், உடலிற்கும் புத்துணர்ச்சியை தரக்கூடியது தேநீர். பலருக்கு தனிமையைப் போக்குவதற்கும், அமைதிப்படுத்திக்கொள்வதற்கும், மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்வதற்கும் சிறந்த பானமாக இருக்கிறது. 

டீ குடிப்பது நன்மையா? தீமையா? அதனால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன? என்பது குறித்து ஆய்வுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால், டீ குடிப்பதை அன்றாட வழக்கமாக வைத்திருப்பவர்கள் இன்று ஏராளம். 

டீ குடித்தால் என்னென்ன நன்மை?

♦ டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது, இயற்கையாகவே நம் உடலில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களை அதிகரிக்கிறது.

♦ வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது

♦ மாரடைப்பு வராமல் தடுக்க உதவுகிறது

♦ இது வாய்வழி கோளாறுகளைத் தடுக்கிறது

♦ புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது என்று பல ஆய்வுகள் கூறுகின்றன. 

♦ அதுபோல ஆயுளைக் கூட்டும் என்று சமீபத்திய ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

♦ மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

 ♦ உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. 

அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சுதான் என்ற பழமொழிக்கு ஏற்ப, எந்தவொரு உணவும் அளவுக்கு மீறினால் நஞ்சுதான். அதேபோல் டீயும் அப்படித்தான். நாள் ஒன்றுக்கு சாதாரணமாக ஒன்று அல்லது இரண்டு கப் டீ மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் என்று உடல்நல நிபுணர்கள் தெரிவிக்கின்றனர் 
 
ஒரு கப் டீ 100- 150 மிலி வரை இருக்கலாம். காலை எழுந்ததும் ஒரு டீயும் பிற்பகல் அல்லது மாலையில் ஒரு டீயும் குடிக்கலாம். இரவு டீ குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் அது தூக்கமின்மையை ஏற்படுத்தும். 

டீயில் காஃபின் மற்றும் சர்க்கரை அளவை முடிந்தவரை குறைத்துக்கொள்ளலாம். காபின் அதிகம் இருந்தால் பக்க விளைவுகள் ஏற்படும். முக்கியமாக  ஹீமோகுளோபின் உற்பத்தியைத் தடுத்து ரத்த சோகையை ஏற்படுத்தும். குறிப்பாக ரத்த சோகை உள்ள பெண்கள் காஃபின் அளவை குறைவாக எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. 

இருப்பினும் பால் டீயை விட பால் கலக்காத பிளாக் டீ அல்லது க்ரீன் டீதான் மிகவும் சிறந்தது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர் . நாள் ஒன்றுக்கு நன்கு முதல் ஐந்து கப் டீ குடிக்கலாம் என்றும் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றனர். அப்படிக் குடித்தால், அவை அனைத்தும் பிளாக் டீ அல்லது க்ரீன் டீ கணக்கில்தான் வரும். எனவே, பால் கலக்காத டீ என்றால் நாள் ஒன்றுக்குமூன்று முதல் நான்கு கப் வரை எடுத்துக்கொள்ளலாம். 

அதுபோன்று, பிளாக் டீயை விட க்ரீன் டீ சிறந்தது. உடல் எடையைக் குறைக்க க்ரீன் டீ மிகவும் உதவுகிறது. அதுபோல மூலிகை டீயையும் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். 

உண்மையில், அதிகமாக தேநீர் அருந்துவதனால், உங்கள் உடல் இரும்புச்சத்து உறிஞ்சுவதை குறைக்கும். இதனால் ரத்த சோகை ஏற்படும். மேலும், பதட்டம் மற்றும் மன அழுத்தத்தை அதிகரிக்கும், குமட்டல் உள்ளிட்ட வயிற்றுப் பிரச்னைகளை அதிகரிக்கும், தலைவலி, நெஞ்செரிச்சல், தூக்கமின்மை போன்றவையும் ஏற்படலாம். கர்ப்பிணிகள் டீ குடிப்பதைத் தவிர்த்து பால் அருந்துவைத்து நல்லது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how many timestake tea


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->