இப்போ ஒரு பேய் கதை சொல்ல போறேன்..! நடுவுல பேசாதீங்க..!  - Seithipunal
Seithipunal


பயங்கர பேய் கதை:

அண்ணே! இந்த பேய், பிசாசு இதெல்லாம் இருக்கா?

அதெல்லாம் இருக்குப்பா. 

ஏதோ நேர்ல பாத்த மாதிரி சொல்றீங்க. 

ஆமா. நான் நேர்ல பாத்து இருக்கேன். 

என்னண்ணே சொல்றீங்க! நீங்க எப்போ பேய பாத்தீங்க? எங்க பாத்தீங்க?

இதே ஊருல. அப்போ எனக்கு ஒரு 18 வயசு இருக்கும். நம்ம ஊருல பார்க் இருக்குல. அங்கதான் அந்த ஆவிய பாத்தேன். 

என்னண்ணே ஆவிய பாத்தேன்னு ஏதோ மனுசன பாத்த மாதிரி சொல்றீங்க. 

இரு உனக்கு அந்த கதைய சொல்றேன். கதை சொல்லும்போது குறுக்க பேசாதே. 

சரி சொல்லுங்க அண்ணே. 

எனக்கு அப்போ 18 வயசு. பார்க்ல, தூக்குல தொங்குன ஒரு பொண்ணு அங்கேயே மோகினியா சுத்துறானு ஒரு பேச்சு அப்போ ஊருக்குள்ள இருந்தது. அதுவும் அந்த பேய் சின்ன வயசு ஆம்பளைங்களை பாத்தா அப்படியே ஒரு அறை கொடுக்கும். அந்த அறைய வாங்குனவன் இரத்தம் கக்கி சாக வேண்டியதுதான்னு எல்லோரும் நம்புனாங்க. 

ஆமாண்ணே! இப்போ கூட அந்த ஏரியால நைட் 8 மணிக்கு மேல ஆள் நடமாட்டமே குறைஞ்சிடும். 

கதைய மட்டும் கேட்கணும். நடுவிலே பேசாத. 

சரி சரி சொல்லுங்க. 

அந்த வயசுல எனக்கும் உன்னை மாதிரியே பேய், பிசாசுல நம்பிக்கை இல்ல. ஒரு நாள் ராத்திரி சினிமா பாத்துட்டு வரும்போது வேணும்னே அந்த வழியா போக முடிவெடுத்து அந்த வழியா போனேன் . ராத்திரி 1 மணிக்கு அந்த பார்க் கிட்ட யாருமே இல்ல. நான் கொஞ்சம் கூட பயம் இல்லாம பார்க் ரோடுல நடக்க ஆரம்பிச்சேன். கொஞ்ச கொஞ்சமா நடந்து பார்க் கிட்ட போனதும் என்னையும் அறியாம பார்க்ல யாரு இருக்கானு திரும்பி பார்த்தேன். அங்க அது இருந்துச்சு. 

என்னது அது. சீக்கிரம் சொல்லுங்க. எனக்கு ரொம்ப ஆர்வமா இருக்கு. 

அதாண்டா மோகினி. அதுக்கு வயிறு வரைக்கும் நாக்கு வெளியே தொங்கிட்டு இருந்துச்சு. அதோட ரெண்டு சிங்க பல்லும் வாய விட்டு வெளிய நீட்டிகிட்டு டிராகுலா பல்லு மாதிரி இருந்துச்சு. கருப்பு சேலை கட்டிக்கிட்டு அங்க பசங்க விளையாடுற ஊஞ்சல்ல உக்காந்து ஆடிட்டு இருந்துச்சு. அது என்னை பாத்துடுச்சு. 

அய்யயோ! அப்புறம்,

அதை பாத்ததும் நான் ஓட ஆரம்பிச்சேன். அது என்னை துரத்த ஆரம்பிச்சிடுச்சு. அன்னைக்கு பாத்து, செருப்பு காலை கடிச்சதுல என்னால வேகமா ஓட முடியல. பேய் என்னை நெருங்கிடிச்சு. இன்னும் ஒரு அடில என்னை பிடிச்சிடும். பிடிச்சுட்டா ஒரே அறைதான். புது செருப்பை கழட்டி போட்டு ஓடவும் எனக்கு மனசு வரல. 

அப்புறம் என்னதான் ஆச்சு. 

இப்போ பேய் என் கிட்ட வந்து என் கூடவே ஓட ஆரம்பிச்சிடுச்சு. அறைய சரியான நேரம் பாத்து கைய ஓங்குது. 

என்னதான் செஞ்சீங்க அண்ணே. 

அப்போ ஒரு சுவர் தெரிஞ்சிச்சு. அப்பிடியே ஒரே ஜம்ப்ல அதை தாண்டிட்டேன். அந்த பேய் புடவை கட்டி இருந்ததால சுவர் ஏறி குதிக்க முடியல. நான் தப்பிச்சுட்டேன். இதுதான் நான் பேய் பார்த்த கதை. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ghost funny stories in tamil


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->