சில நொடிகளில் பலன் கொடுக்கும் ஐஸ் பேஷியல்.!  - Seithipunal
Seithipunal


சில நிமிடங்களிலேயே முகத்திற்கு பொலிவும், அழகும் தரவல்லது ஐஸ்கட்டி தான். இது விரைவில் பலன் அளிக்கக்கூடியது. மேலும், செலவே இல்லாத ஒன்று.

கெமிக்கல் இல்லாத பேஸ் வாஷ் கிரீம் கொண்டு உங்கள் முகத்தை நன்றாக கழுவி உலர வைக்கவும். பின்னர் 2 கிளாஸ் தண்ணீரை 5 நிமிடம் கொதிக்க வைத்து ஆற வைக்கவும். அது நன்றாக ஆறிய பின்னர் ஒரு சுத்தமான ஜாடியில் அதை ஊற்றி எசன்ஷியல் ஆயில் சில சொட்டுகளை அதில் போடவும். 

கிரீன் டீ சாருக்கான் பவுடரை அதில் சிறிது சேர்க்கவும். பின்னர், இந்த கலவையை ஃப்ரிட்ஜில் வைத்து ஐஸ் கட்டிகளாக மாற்றி அந்த பனி கட்டியை துணியில் வைத்து மற்றொரு பக்கம் மூடாமல் இருப்பது போல அமைத்துக் கொள்ளவும்.

உங்கள் முகத்தின் மீது முன்நெற்றியில் மற்றும் கண்களுக்கு கீழே இந்த பனிக் கட்டியால் வட்ட வடிவில் தடவுங்கள் இவ்வாறு சுமார் 20 முதல் 25 நிமிடங்கள் செய்தால், உங்கள் முகம் பளபளப்பாக இருக்கும். ஐந்து அல்லது ஏழு நிமிடங்களுக்கு ஒருமுறை பனிக்கட்டியை மாற்றவும். பின்னர் சுத்தமான நூல் துணியால் முகத்தை துடைத்து மாஸ்சாரைசர் செய்து கொள்ளவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

face freshener ice facial


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->