அட்டகாசமான பலாக்காய் மட்டன் பிரியாணி.! பிச்சு உதறும் டேஸ்ட்.!  - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள்:

அரிசி -  1  1/2 கிலோ 
பிஞ்சு பலாக்காய் - 2 
மட்டன் - 2  கிலோ 
பட்டை - 4 
கிராம்பு - 4 
ஏலக்காய் - 4 
பிரிஞ்சி இல்லை - 1 
அன்னாசி பூ - 1 
கொத்தமல்லி புதினா இலைகள் - 1 / 2  கட்டு
தயிர் - 1/4 லிட்டர் 
எலுமிச்சை பழம் – 2 
வெங்காயம் - 600 கிராம் 
தக்காளி - 400 
இஞ்சி பூண்டு விழுது - 200 பூண்டு அதிகமாக 
மல்லித்தூள் - 3  
மிளகாய்த்தூள் - 3 
நெய் - 200 மிலி 
எண்ணெய் - 150  
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் பலாக்காய் சேர்த்து மஞ்சள் தூள் உப்பு  சேர்த்து முக்கால் பதத்திற்கு வேக விட்டு எடுத்துக்கொள்ளவும்.

குக்கரில் கறியை சேர்த்து அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, அன்னாசி பூ, உப்பு  சேர்த்து கறியை முக்கால் பதத்தில் வேகவைத்து எடுத்து கொள்ள வேண்டும்.

ஒரு அகண்ட பாத்திரத்தில் நெய் எண்ணெய் சேர்த்து கொதித்தவுடன்  பட்டா கிராம்பு ஏலக்காய் பிரிஞ்சி இலை அன்னாசி பூ சேர்த்து புரிந்து உடன் வெங்காயம் சேர்த்து நன்றாக பொன்னிறம் வரும் வரை வதக்கிவிட்டு தயிர் சேர்த்து அதன் பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அடி பிடிக்காமல் கிளறி விட்டு கொத்தமல்லி புதினா இலைகளை சேர்த்து ஒரு முறை நன்றாக கிளறிவிட்டு வதங்கியவுடன் தக்காளி சேர்த்து நன்றாக வதங்கிய பின் மல்லி தூள், மிளகாய் தூள் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி  பலாக்காய், மட்டன், சேர்த்து நன்றாக கொதித்து வந்தவுடன் உப்பு காரம் சரிபார்த்துவிட்டு பாத்திரத்தை மூடி வேக விடவும். 

அதன் பின் அரிசிக்கு தேவையான தண்ணீர் ஊற்றி கொதித்தவுடன் அரிசியை சேர்த்து உப்பு சேர்த்து சரிபார்த்துவிட்டு தண்ணீர் நன்றாக கொதித்த உடன் 10 நிமிடம்  தம் போட்டு விடவும் அரிசி வெந்தவுடன் மீதி இருக்கும் நெய்யை மேலாக ஊற்றி மீண்டும் 5 நிமிடம் மீண்டும் தம் போட்டால் வித்தியாசமான பலாக்காய் மட்டன் பிரியாணி ரெடி!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delicious jackfruit mutton biriyani receipe 


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->