சூப்பரான செட்டிநாடுக் கார குழம்பு.! இப்படி செஞ்சா ஒரு பருக்கைய கூட விட்டுவைக்க மாட்டாங்க.!
Chettinad Karakkuzhambu special In Tamil
தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் - கால் கிலோ
தக்காளி -இரண்டு
மணத்தக்காளி வத்தல்
உறித்த பூண்டு
மிளகாய் தூள் - இரண்டு ஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிதளவு
புளி - 2 எலுமிச்சம்பழ அளவு
வெந்தயம், சீரகம், மிளகு - தலா ஒரு ஸ்பூன்
கொத்தமல்லி விதை - 2 ஸ்பூன்
கருவேப்பிலை, கொத்தமல்லி இழை - சிறிதளவு
செய்முறை :
முதலில் புளியை ஊறவைத்து கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்,
பின்பு கடாயில் கொத்தமல்லி விதை, மிளகு, சீரகம், வெந்தயம், காய்ந்த மிளகாய் 4, எல்லாவற்றையும் சேர்த்து எண்ணெய் சேர்க்காமல் வறுத்து, மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின்பு அதே கடாயில் நான்கு ஸ்பூன் எண்ணெய் விட்டு, சின்ன வெங்காயத்தை போட்டு நன்றாக கிளறவும்.
அதனுடன் மணத்தக்காளி வத்தலும், சேர்த்து வதக்கி பின், தக்காளி சேர்க்கவும்.
அனைத்தும் நன்றாக வதங்கிய பின் கரைத்து வைத்த புளியை ஊற்றவும்.
பின்பு தேவையான அளவு உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சேர்த்து கொதிக்க விடவும் பின்பு நாம் அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து நன்றாக சுண்டி வரும் வரை வதக்கவும்.
பின்பு அரை ஸ்பூன் வெல்லம் சேர்த்து சிறிதளவு கொத்தமல்லி தழை தூவி, தாளிப்புக்கு வடகம் சேர்த்து மூன்று ஸ்பூன் எண்ணெய் விட்டு இதில் ஊற்றி இறக்கவும். இப்பொழுது சுவையான செட்டிநாடு கார குழம்பு தயார்.!
English Summary
Chettinad Karakkuzhambu special In Tamil