எப்போதும் தனிமையில் இருப்பவரா நீங்கள்? இது உங்களுக்கு தான்... உஷார் தகவல்!
Being alone problem facing
தனிமையிலே இனிமை காண முடியுமா? என்ற வாசகம் கேட்பதற்கு வேண்டுமானால் இனிமையாக இருக்கலாம். ஆனால் நிஜ வாழ்க்கையில் தனிமை ஒரு கொடுமையான விஷயம். துவண்டு போய் இருக்கும் வேளைகளில் கட்டி அணைத்து ஆறுதல் படுத்த ஆளில்லாத வேதனைகளின் வலியை உணர்ந்து இருப்பார்கள். தனிமையினால் என்னென்ன தீமைகள் ஏற்படுகின்றன என்று பார்ப்போம்.
தனிமையில் ஒருவர் நீண்ட நாட்களாக இருப்பதனால் அவருக்கு தீவிரமான மன அழுத்தம் ஏற்படக்கூடும். மேலும் தலைவலி, டென்ஷன் போன்ற பிரச்சனைகளும் உருவாகும். தொடர் தனிமையின் காரணமாக ஒருவருக்கு தீவிரமான யோசனைகள் தோன்றி அது பலவிதமான மனநல பாதிப்புகளை ஏற்படுத்தும்.
நம் எண்ணங்களுடன் தனிமையில் இருப்பது எப்போதுமே ஒரு ஆரோக்கியமான விஷயம் அல்ல. பொதுவாக சுயவிமர்சனங்களை சந்திக்கும்போது நம் தனிமை அவற்றை பல மடங்காக பெருக்குகிறது. இதன் காரணமாக நம்மை நாமே தாழ்த்திக் கொள்ளும் ஒரு மனநிலையை நமக்குள் உருவாக்கிக் கொள்கிறோம். இது தேவையில்லாத மன அழுத்தத்தையும் உளவியல் சிக்கல்களையும் நமக்கு ஏற்படுத்தும்.
அதிக நேரம் தனிமையாக இருப்பது நம் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்க கூடிய ஒன்றாகும். சமூகத் தனிமைப்படுத்துதல் மற்றும் தனிமை முப்பது சதவீத இறப்பிற்கு காரணமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சமூக ரீதியாக இணைந்திருப்பது உளவியல் ரீதியாகவும் உடல் நலத்திற்கும் நேர்மறையான விளைவுகளை கொடுப்பதை நாம் ஆய்வுகளின் முடிவுகளின் மூலம் காணலாம்.
தனிமையில் இருப்பவர்கள் பெரும்பாலும் தங்களை தாங்களே அதிகமான சுயவிமர்சனத்திற்கு ஆளாக்குகின்றனர். இது அவர்களது உளவியலில் எதிர்மறையான எண்ணங்களை அதிகரிக்கச் செய்து அவர்களுக்கு மனநல சிக்கல்களையும் இயலாமையையும் ஏற்படுகிறது. இதன் விளைவாக சிறு சிறு விஷயங்களில் கூட தங்களை தேற்றிக் கொள்ள முடியாமல் உடைந்து போவதை நாம் பார்க்கலாம்.
தனிமை என்பது உடல் சார்ந்த பாதிப்புகளை மட்டும் ஏற்படுத்தாமல் உடல் சார்ந்த பாதிப்புகளையும் ஏற்படுத்தக்கூடிய ஒன்று. தனிமையினால், ஏற்படுகின்ற மன அழுத்தத்தால் சரியான உறக்கம் இல்லாமலும் முறையற்ற உணவுப் பழக்க வழக்கங்களாலும், உடல் பருமன், நீரிழிவு நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளும் நமக்கு ஏற்படக்கூடும்.
English Summary
Being alone problem facing