நரம்பு மண்டலத்தை பலப்படுத்தும் பங்கஜ முத்திரை.. எப்படி செய்வது?
Pangaja Muthra
முத்திரைகள் நமது உடலுக்கு தேவையான பலத்தை தரும். நரம்பு மண்டலத்தை பலப்படுத்தி ரத்த ஒட்டத்தை அதிகரிக்கும் பங்கஜ முத்திரையை பற்றி பார்போம்.
பங்கஜ முத்திரை:
இரண்டு கைகளையும் கும்பிடுவது போல் இணைத்து விரல்களை விரித்து கொள்ள வேண்டும். இரண்டு கைவிரல்களையும் ஒன்றோடொன்று இணைந்து இருக்க வேண்டும். பத்மாசன முறையில் அமர்ந்திருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.
15 நிமிடங்கள் வரை இந்த முத்திரையை செய்ய வேண்டும். பங்கஜ முத்திரை நீண்ட நேரம் செய்யக் கூடாது. நீண்ட நேரம் செய்தால் சளி இருமல் போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கும்.
நன்மைகள்;
இந்த முத்திரை நரம்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி ரத்தம் தொடர்பான பிரச்சனைகளை சரிசெய்யும். அதே போல முதுகெலும்ப்பை பலப்படுத்தும். வயிற்றில் உள்ள கட்டிகளை கரைக்கும். மனம் அமைதி பெறும்.