சுவையான தென்னிந்திய இனிப்பு.. எப்படி செய்வது? - Seithipunal
Seithipunal


தென்னிந்த உணவுகளில் நெய் அப்பம் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று.  அதனை எப்படி செய்வது என தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 250 கிராம் தேங்காய் துருவல் - 6 தேக்கரண்டி ஏலக்காய் - 4 சமையல் சோடா - ¼ தேக்கரண்டி வாழைப்பழம் - 1 உப்பு - ¼ தேக்கரண்டி வெல்லம் - 200 கிராம் நெய் - தேவையான அளவு

செய்முறை:

பச்சரிசியை ஊறவைத்து கொள்ளவும்.வெல்லத்தை மிதமான தீயில் பாகு காய்ச்சி கொள்ளவும். வாழைபழத்தை தோல் நீக்கி நறுக்கி கொள்ளுங்கள். ஊறவைத்த அரிசியுடன் வாழைப்பழம், ஏலக்காய் சேர்த்து, மிக்சியில் சிறிது கெட்டியாக அரைத்துக்கொள்ளவும். அதில் வெல்லபாகு தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

இட்லி மாவு பதத்திற்கு கலந்ததும் அடுப்பில் குழிப்பணியார சட்டியை வைத்து அது காய்ந்ததும்அதன் ஒவ்வொரு குழியிலும் சிறிதளவு நெய் ஊற்றவும். பின்பு குழிகளில் மாவை ஊற்றி, வெந்ததும் எடுத்து பரிமாறலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ney appam Recipe


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->