சுண்டி இழுக்கும் சேப்பக்கிழங்கு குழம்பு.! எப்படி செய்து அசத்தலாம்.!  - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள் :

நல்லெண்ணெய்   - தேவையான அளவு
சேப்பகிழங்கு   - கால் கிலோ
சின்னவெங்காயம் - 1 கைப்புடி அளவு 
 மஞ்சள் தூள்  - சிறிதளவு
வெந்தயம்  - 1\4 தேக்கரண்டி
தனியா தூள் - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை  - சிறிதளவு
பூண்டு பற்கள் -5
தனி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் 
புளி கரைசல் (சிறு நெல்லிக்காய் அளவு புளி எடுத்து கரைசல் தயார் செய்யவும்)
தக்காளி சின்னது  - 2 
தேங்காய் பால் - 150 மி.லி.

cheppangizhangu, seithipunal

செய்முறை :

சேப்பங்கிழங்கை பதமாக வேக வைத்து பின்னர் அதன் தோலை உரித்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ளவும்.

தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்தை நன்றாக பொடி பொடியாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.

மண் சட்டியை அடுப்பில் வைத்து சட்டி காய்ந்த பின்னர், நல்லெண்ணையை அதில் ஊற்றி, பின்னர் வெந்தயம் போட்டு தாளித்து நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து கிளறவும்.

வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் மஞ்சள் தூள், சுத்தமான மிளகாய் தூள் மற்றும் தனியா தூள் போட்டு பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கி அதில் தக்காளி, பூண்டு சேர்த்து வதக்கவும். 

தக்காளி நன்றாக வதங்கிய பின்னர், அதில் சேப்பகிழங்கை சேர்த்து, பிரட்டி தேவையான அளவு உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் மூடி வேக வைத்து கொள்ளவும். 

பின்னர் புளிக்கரைசலை சேர்த்து கிளறி பச்சை வாசனை போகும் வரை 10 நிமிடங்கள் மூடி போட்டு அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு இறுதியில் தேங்காய் பால் சேர்த்து 10 நிமிடம் கிளறி இறக்கினால் சுவையான சேப்பகிழங்கு புளிக்குழம்பு ரெடி.! 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to prepare cheppakizhangu kuzhampu in tamil


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->