கருணைக்கிழங்கு இருக்கா? அப்போ வாங்க துவையல் செய்யலாம்.!
how to make karunaikizhangu thuvaiyal
கருணைக்கு கிழங்கு இருக்கா? அப்போ வாங்க துவையல் செய்யலாம்.!
பொதுவாக மக்கள் கருணைக் கிழங்கை புளிகுழம்பில் போட்டுதான் சமைப்பார்கள். ஆனால் தற்போது முதல் முறையாக துவையல் செய்வது எப்படி? என்பதுக்கு குறித்து இந்த பதிவில் காண்போம்.
தேவையான பொருள் : -
கருணைக்கிழங்கு
இஞ்சி
பச்சை மிளகாய்
எலுமிச்சை பழம்
மஞ்சள் தூள்
எண்ணெய்
கடுகு
பொட்டுக்கடலை
வெல்லத்தூள்
உப்பு
செய்முறை :-
ஒருகுக்கரில் கருணைக்கிழங்கை நறுக்கி போட்டு அதனை அடுப்பில் வைத்து இரண்டு அல்லது மூன்று விசில் விட வேண்டும். பின்னர் அதனை எடுத்து தோல் உரித்து மசித்துக் கொள்ளவும்.
பின்னர் அடுப்பில் கடையை வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு, இஞ்சி, பச்சை மிளகாய் போட்டு தலிக்கவேண்டும். அதில், மசித்து வைத்துள்ள கிழங்கை போட்டு அதனுடன் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும்.
கிழங்கு நன்கு கெட்டியானதும் அவற்றில் சிறிதளவு எலுமிச்சை சாறு ஊற்று இறக்க வேண்டும். இதோ சுவையான மணமான கருணைக்கிழங்கு துவையல் தயார்.
English Summary
how to make karunaikizhangu thuvaiyal