நிச்சியக்கப்பட்ட பின்னர் தாம்பத்தியம்?.! வாழ்க்கைக்கு துவக்கமா? கலக்கமா?.!!
after wedding couple enjoy privately is correct or wrong
இன்றுள்ள களலத்தில் திருமணம் முடியும் முன்னதாகவே பெரும்பாலான தம்பதிகள் தாம்பத்தியத்தில் தங்களின் எதிர்கால துணையுடன் ஈடுபடுகின்றனர். இது அவர்களின் திருமணத்தின் பிற்கால வாழ்க்கையில் பிரச்சனையை ஏற்படுத்தும். இந்த விஷயத்தில் பொதுவாகவே ஆண்கள் வரம்பு மீறினாலும்., பெண்கள் கவனமாக இருப்பது நல்லது.
அன்றுள்ள காலத்தில்., நமது உற்றார் மற்றும் உறவினர்கள் சேர்ந்து திருமணத்தில் இணைக்கும் தம்பதிகளுக்கு நிச்சயதார்த்தம் செய்து வைப்பார்கள். நிச்சயதர்சம் என்ற சடங்கானது., இரு துணைகளை இணைத்து திருமணம் செய்து கொள்ள உறுதிப்படுத்திவிட்டோம் என்று கூறுவதே ஆகும்.
இந்த விஷயத்தில்., நிச்சயதார்த்தம் முதல் திருமணம் வரையிலான காலத்தில்., தம்பதிகள் தங்களை உணர்ந்து கொண்டு திருமண வாழ்க்கையை துவங்க வேண்டும் என்பதை அச்சாரமிட்டு காட்டுகிறது. இந்த தருணத்தில்., திருமணம் முடியும் முன்னதாகவே தம்பதிகளின் தாம்பத்தியமானது உறவுகளில் விரிசலை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது.
இதில் பெரும்பாலும் அளவுக்கு அதிகமாக அலைபேசியில் பேசிக்கொண்டு இருப்பது., டேட்டிங் செல்வது மற்றும் அதிகளவு அன்புகளை பரிமாறிக்கொள்ளுதல் போன்றவை ஆகும்.. அளவுக்கு அதிகமாக பெண்கள் தங்களின் வருங்கால கணவருடன் ஆசையாக பேசினாலும்., ஆணின் மனம் தாம்பத்தியத்தை எண்ணியே இருக்கும். சில ஆண்கள் பார்ப்பதற்கு எதுவும் தெரியாதது போல இருந்தாலும்., தனிமையில் பேசும் போது தங்களின் குணத்தை காண்பிப்பார்கள்.
இந்த திருமணத்திற்கு முன்னான தம்பதிகளின் ஆசையால்., பிரச்சனை என்ற சூழ்நிலை வந்து விடும் பட்சத்தில்., ஊராரால் தவறுகள் அனைத்தும் பெண் மீது தான் என்று புறம் பேசப்படுவது வழக்கமான ஒன்றாக இருப்பதை மறக்க வேண்டாம். நிச்சயம் செய்த பின்னரும்., திருமணத்திற்கு முன்னரும் உள்ள இடைவெளியில்., அதிகளவு நெருக்கத்தை தவிர்ப்பது நல்லது.
தங்களின் துணையை சந்திக்க விருப்பம் இருப்பது இயற்கையான ஒன்றாக இருந்தாலும்., இந்த சமயத்தில் சந்தித்தலை உறுதி செய்யும் வகையில் புகைப்படங்கள் ஏதும் எடுத்து வைக்க வேண்டாம். ஆதாரம் என்று தேவைப்படும் பட்சத்தில்., ஆண்கள் (கணவர் வீட்டார்) இது போன்றவற்றை உடனடியாக எடுத்து உங்களின் மீது தேவையற்ற வீண் பழியையும் சுமத்துவார்கள் என்பது நினைவில் இருக்கட்டும்.
Tamil online news Today News in Tamil
English Summary
after wedding couple enjoy privately is correct or wrong