ஒருதலை காதல் விவகாரம்: கல்லூரி மாணவியின் நண்பரை சுட்டுக்கொன்ற இளைஞர்.! - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஒருதலை காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவியின் நண்பரை இளைஞர் சுட்டுக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலம் இந்தூர் பகுதியை சேர்ந்தவர் ராகுல் (23) அதே பகுதியைச் சேர்ந்த மோனிகா(20) என்ற கல்லூரி மாணவியை ஒருதலையாக காதலித்து அவரை பின்தொடர்ந்து வந்துள்ளார். இந்நிலையில் மோனிகா நேற்று முன்தின மாலை நண்பர்களுடன் ரயில் நிலையம் வந்தபோது, அங்கு வந்த ராகுல் தனது காதலை ஏற்றுக் கொள்ளும்படி மோனிகாவை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதைப் பார்த்த மோனிகாவின் கல்லூரியின் நண்பரான சங்கர்(20) என்பவர் ராகுலை தடுத்து நிறுத்தியபோது இவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் இருவருடைய வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த ராகுல் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சங்கரை சுட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த சங்கரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக சங்கர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஷங்கரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற ராகுலை தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

youth shot a friend of a college student in uttar pradesh


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->