வீடியோ காலில் காதலி கெஞ்சல்..! காதலன் செய்த விவகாரம்.. பின் நிகழ்ந்த விபரீதம்.!
women suicide on anthra
ஆந்திர மாநிலத்தில் இருக்கும் நெல்லூர் பகுதியை சேர்ந்த ரம்யா என்பவர், அதே பகுதியில் இருக்கும் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்துள்ளார். இந்த நிலையில், ரம்யாவிற்கு அதே பகுதியைச் சேர்ந்த சிவ பார்கவ் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது நாளடைவில் காதலாக மாறி இருக்கின்றது.
சமீபகாலமாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். திடீரென அந்த இளைஞர் ரம்யாவுடன் பேசுவதை நிறுத்தி இருக்கின்றார். இதனால், அதிர்ச்சி அடைந்த ரம்யா தன்னுடைய காதலனுடன் பலமுறை பழையபடி பேசுமாறு கெஞ்சி இருக்கின்றார். ஆனால், அவர் காதலியை கண்டுகொள்ளவே இல்லை. மேலும், தனது தோழிகள் மூலமும் ரம்யா தூதுவிட்டு பார்த்துள்ளார். அப்போதும் அந்த இளைஞர் ரம்யாவை கண்டுகொள்ளவில்லை.
இதனால், மிகவும் மன உளைச்சலில் இருந்த ரம்யா, தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். இதனை தொடர்ந்து தன்னுடைய அறைக்குள் சென்று துப்பட்டாவை கொக்கி மாட்டி வைத்து விட்டு அதனை வீடியோவாக பதிவு செய்து, கடைசியாக ஒருமுறை தன்னிடம் பேசுமாறு காதலனுக்கு அனுப்பி இருக்கின்றார். ஆனால், காதலன் எந்தவிதமான பதிலையும் ரம்யாவிற்கு அளிக்கவில்லை. இதனால், மேலும் மனமுடைந்த ரம்யா லைவ் வீடியோவில் தற்கொலை செய்து கொண்டு இருக்கின்றார். நீண்ட நேரமாக ரம்யாவின் அறை பூட்டியே இருந்ததால், பெற்றோர்கள் கதவை தட்டி பார்த்தனர்.
ஆனால், கதவு திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர்கள் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்த பொழுது, தங்களுடைய மகள் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து, கத்தி கதறி அழ ஆரம்பித்தனர். பின்னர் இது குறித்து காவல் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து ரம்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தநர். ரம்யாவின் காதலனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.