தொடரும் மர்ம மரணங்கள்.. திருமண விழாவில் நடனமாடிய பெண் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


சமீப சில நாட்களாக நாடக கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், இசைக் கலைஞர்கள் உள்ளிட்ட சிலர் அந்தந்த மேடைகள் மற்றும் மைதானங்களிலேயே அடுத்தடுத்து உயிரிழக்கும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது.

அதிலும், குறிப்பாக வட மாநிலங்களில் இது போன்ற மரணங்கள் நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில் மத்திய பிரதேச மாநிலம் சியோனி மாவட்டத்தின் பந்தோல் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பக்காரி கிராமத்தில், திருமண நிகழ்ச்சி ஒன்றில் 4 பெண்கள் நடமாடியுள்ளனர்.

அப்போது ஒரு பெண் மற்ற 4 பெண்களுடன் நடனமாடும்போது திடீரென மேடையில் சரிந்து விழுந்தார். இதனை எடுத்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மேடையில் மயங்கி விழுந்த அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக  தெரிவித்துள்ளனர். அந்த பெண் மேடையில் நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Women death in dance in marriage function


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->