நடுரோட்டில் பற்றி எரிந்த கார் - உடல்கருகி உயிரிழந்த பெண்.! - Seithipunal
Seithipunal


ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பாலி மாவட்டத்தில் அசோக் படேல் என்பவர் தனது மனைவி பரமேஸ்வரி படேலுடன், பாலியில் உள்ள செண்டா கிராமத்திற்கு அருகே உள்ள அஜானி மாதா கோவிலுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். 

அப்போது அவருடைய காரின் பின் பகுதி  திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் அசோக் படேல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஆனால், பின் இருக்கையில் அமர்ந்திருந்த அவரது மனைவி உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காரின் பின் இருக்கையில் பாதி எரிந்த நிலையில் இருந்த பரமேஸ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு எதுவும் செய்யப்படாமல் ஏதேனும் முறைகேடு நடந்துள்ளதா? என்பது குறித்து அசோக்கிடம் போலீசார் விசாரணை நடைபெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman died in rajasthan fire accident


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->