கேரளா || வாலிபரிடம் நூதனமான முறையில் கொள்ளையடித்த இளம்பெண், கணவருடன் கைது..! - Seithipunal
Seithipunal


இளைஞரை விடுதிக்கு அழைத்து பணம் நகைகளை மிரட்டி பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.

கேரள மாநிலம் கோட்டயம் வைக்கத்தை சேர்ந்த ஒரு இளைஞர் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த வாலிபருக்கு கொல்லத்தை சேர்ந்த ஹசீனா என்ற பெண் தொடர்ப்பு கொண்டு தனக்கு வேலை வேண்டும் என கேட்டுள்ளார். மேலும் அவரிடம் குழைந்து பேசிய அவர் பேசி தனக்கு கொஞ்சம் முன்பணம் நேரில் தருமாறு கேட்டுள்ளார்.

அந்த இளைஞரும் அவரை நம்பி பணத்தை எடுத்து கொண்டு அவர் சொன்ன விடுதிக்கு சென்றார். அந்த இளைஞர் விடுதி அறைக்கு வந்த நிலையில், சிறிது நேரத்தில் ஹசீனாவின் கணவர் ஜிதின் (29), அவரது நண்பர் அன்ஷாத் (26) ஆகியோர் அங்கு வந்தனர். அதனை தொடர்ந்து, அந்த இளைஞரை தாக்கி அவரிடம் இருந்த பணம், நகைகள், ஏடிஎம் கார்டுகளை பறித்து கொண்டு அவரை கழிப்பறையில் வைத்து பூட்டிவிட்டு தப்பி சென்றனர்.

காயமடைந்த அவரை மீட்ட ஊழியர்கள்  வீட்டிற்கு அனுமதித்தனர். அதனை தொடர்ந்து வாலிபரை மீண்டும் தொடர்பு கொண்டு மிரட்டி கூகுள் பே மூலம் ரூ.15 ஆயிரம் வரை வாங்கியுள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதன்பின், ஹசீனா, அவரது கணவர் ஜிதின், நண்பர் அன்ஷாத் ஆகியோரை அதிரடியாக கைது செய்தனர். அவர்கள் வேறு யாரிடமுமாவது அவர்கள் கைவரிசை காட்டியுள்ளனரா எனவும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Woman and Her Husband Arrested


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->