கணவரின் உறவினரான 16 வயது மருமகனை திருமணம் செய்த மனைவி; அதிர்ச்சியில் குடும்பத்தினர்..!
Wife marries husbands 16 year old nephew
டெல்லியில் 35 வயது பெண் ஒருவர் கணவரை இழந்து தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் கணவரின் உறவினரின் குடும்பத்தை சேர்ந்த சிறுவன் ஒருவர் ஏர் கண்டிஷனர் மற்றும் குளிர்சாதன பெட்டி பழுதுபார்க்கும் தொழிலை கற்றுக்கொள்வதற்காக குறித்த பெண்ணின் வீட்டிற்கு உறவினர்கள் அனுப்பி வைத்துள்ளனர். அந்த சிறுவனுக்கு டெல்லியை சேர்ந்த பெண் அத்தை முறை ஆவார்.
இதனையடுத்து கணவரை இழந்து தலைமையில் இருக்கும் அத்தை முறையான அந்த பெண்ணுக்கு சிறுவனுடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. அத்துடன், இவர்கள் இருவரும் நாளடைவில் திருமணம் செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து சிறுவன் சொந்த ஊரான மீரட்டிற்கு வந்துள்ளான். அப்போது சிறுவனின் நடத்தையில் மாற்றங்கள் இருப்பதை குடும்பத்தினர் கவனித்துள்ளனர். பின்னர் குறித்த சிறுவனை அத்தையுடன் திருப்பி அனுப்ப வேண்டாம் என்று முடிவு செய்துள்ளனர்.
-3f8n3.png)
இந்த நிலையில் மருமகனின் பிரிவால் வருத்தமடைந்த குறித்த பெண், சிறுவனின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அத்துடன் அங்கு காவல்துறை மற்றும் அவரது குடும்பத்தினர் முன்னிலையில், "அவர் இனி என் மருமகன் அல்ல, அவர் என் கணவர், நான் அவருடன் வாழ்வேன்" என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
இது குறித்து மீரட் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறுகையில், சிறுவனுக்கு சுமார் 16 வயது என்பதால், இந்திய சட்டத்தின் கீழ் அவர் சட்டப்படி மைனர். அதனால் அந்தப் பெண் கடுமையான சட்ட விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என தெரிவித்துள்ளார்.
English Summary
Wife marries husbands 16 year old nephew