திடீரென ஆபரேஷன் சிந்தூரை ஏன் நிறுத்தினீர்கள்? எங்கிருந்து அழுத்தம் வந்தது? காங்கிரஸ் கேள்வி!
Why did you suddenly stop Operation Chinthoor? Where did the pressure come from? Congress questions
பிரதமர் மோடி ஏன் மே 10-ந்தேதி மாலையில் திடீரென ஆபரேஷன் சிந்தூரை நிறுத்தினார்? எங்கிருந்து அவருக்கு அழுத்தம் வந்தது? என ஜெய்ராம் ரமேஷ்கேள்வி எழுப்பி உள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த கொடூர சம்பவத்துக்கு நாடு முழுவதும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.மேலும் உலக நாடுகளும் தங்களது கண்டனத்தை தெரிவித்தது.இதையடுத்து மத்திய அரசு பாகிஸ்தான் மீது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.குறிப்பாக சிந்து நதி நீரை நிறுத்தியது.அதனை தொடர்ந்து பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம், 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை மேற்கொண்டது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த 6 பயங்கரவாத முகாம்கள் தகர்க்கப்பட்டன.
இந்த நிலையில், இந்திய விமானப்படையின் தாக்குதலில் எத்தனை பாகிஸ்தான் விமானங்கள் அழிக்கப்பட்டன என்ற விவரத்தை பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்திய விமானப்படைத் தளபதி அமர்ப்ரீத் சிங் வெளியிடுள்ளார்.
அவர் கூறியதாவது:"பாகிஸ்தான் விமானப்படைக்குச் சொந்தமான 6 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. இவற்றில் 5 போர் விமானங்கள், மற்றொரு விமானம் மிகப் பெரிய அளவிலான ராணுவ விமானமாகும் என்று நேற்று கூறியிருந்தார்.இதைத்தொடர்ந்து மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி சரமாரியாக கேள்வி எழுப்பி இருக்கிறது.
இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில், ‘விமானப்படை தளபதி ஏ.பி.சிங்கின் புதிய தகவல்கள் இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது பிரதமர் மோடி ஏன் மே 10-ந்தேதி மாலையில் திடீரென ஆபரேஷன் சிந்தூரை நிறுத்தினார்? எங்கிருந்து அவருக்கு அழுத்தம் வந்தது? அவர் மிக விரைவாக அடிபணிந்தது ஏன்?’ என கேள்வி எழுப்பி உள்ளார்.
English Summary
Why did you suddenly stop Operation Chinthoor? Where did the pressure come from? Congress questions