அதிர்ச்சி.. மகளுக்கு பாலியல் தொல்லை.. புகார் கொடுக்க போன தாயை வன்கொடுமை செய்த போலிஸ் அதிகாரி.!  - Seithipunal
Seithipunal


நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. பிறந்த பெண் குழந்தை முதல், இறக்கப்போகும் பாட்டி வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகாத நபர்களே இல்லை என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு பாதுகாப்பற்றத் தன்மை நிலவி வருகின்றது. 

படிக்கும் பள்ளியில் ஆசிரியர்களினால் ஏற்படும் பாலியல் தொந்தரவு பல மாணவர்களின் கல்வியை மட்டும் சீரழிக்காமல், அவர்களது வாழ்க்கையை புரட்டி போடும் விஷயமாக இருக்கிறது. 

இத்தகைய சூழலில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கன்னோஜ் பகுதியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான தனது மகளுக்கு நீதி கேட்டு காவல் நிலையத்தில் ஒரு தாய் புகார் கொடுத்திருந்தார். இது குறித்து விசாரிக்க வேண்டும் என்று காவல் நிலைய அதிகாரியான அணு மௌரியர் என்பவர் கூறியுள்ளார்.

எனவே, ஆவணங்களில் கையெழுத்து போட பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயை தனது வீட்டிற்கு அந்த அதிகாரி அழைத்துள்ளார். இதை உண்மை என்று நம்பிய அந்த தாய் அதிகாரியின் வீட்டிற்கு சென்ற போது அவரை காவல் நிலைய அதிகாரி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Uttar Pradesh mother raped By police inspector


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->