திருமண விழாவிற்கு சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து.. ஒருவர் பலி.. 30 பேர் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


திருமண விழாவுக்கு சென்று அவர்கள் பயணித்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டம் ஷனிவன் கிராமத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் திருமண விழாவில் பங்கேற்பதற்காக நேற்று இரவு பேருந்தில் சென்றனர். 

ஃபடிக்பூர் மாவட்டம் பிண்ட்ஹி நோக்கி சென்றுகொண்டிருந்தபோது கல்யாண்பூர் பகுதி அருகே பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 30 பேர் படுகாயம் அடைந்தனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விபத்து காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Uttar Pradesh marriage function bus Accident


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->