மனைவியை உயிருடன் எரித்த போதை ஆசாமி: கணவருக்கு போலீசார் வலைவீச்சு.! - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேசம், நைத்துவா கிராமத்தில் மது அருந்துவதை தடுத்த மனைவியை கணவர் பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

நேற்றிரவு முனீஸ் சக்ஷேனா என்பவர் குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். மேலும் மது அருந்துவதை அவரது மனைவி ஷனோ (வயது 40) தடுக்க முயன்றதால் ஆத்திரமடைந்த முனீஸ் இருசக்கர வாகனத்தில் இருந்த பெற்றோரை எடுத்து மனைவி மீது ஊற்றி தீ வைத்துள்ளார். 

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த முனீஷின் மாமியார் தடுக்க முயன்றதில் அவருக்கு தீ காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். 

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஷானோவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். 

இதனை தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள முனீஷை தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Uttar Pradesh husband kill wife


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->