உத்திரப் பிரதேசம் : வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தி மனைவியின் விரலை வெட்டிய ராணுவ மேஜர்.! - Seithipunal
Seithipunal


வரதட்சணைக் கேட்டு ராணுவ மேஜர் ஒருவர் மனைவியின் விரலை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் நகரைச் சேர்ந்தவர் சுதேஷ் பால் சிங். இவர் தனது மகள் ரோஜா தாமரை கடந்த 2014ம் ஆண்டு ராணுவ மேஜர் ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்தார்.

இந்த திருமணத்திற்கு வரதட்சணையாக 60 சவரன் தங்க நகைகள், கார், மூன்று ஏக்கர் நிலம் ஆகியவற்றை சுதேஷ் பால் வரதட்சணையாக கொடுத்துள்ளார். இருந்தபோதிலும் வரதட்சனை போதாது எனக்கூறி ராணுவ மேஜர் மனைவியை அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில் அவசரமாக 10 லட்சம் ரூபாய் கேட்டு மனைவியை அடித்து கொடுமைப்படுத்தி உள்ளார். இதில் அவர் கீழே மயங்கி விழுந்துள்ளார். அப்போது ராணுவ மேஜர் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவியின் விரலை வெட்டியுள்ளார்.

இதனையடுத்து வலியில் துடித்த மனைவி கத்தி கூச்சலிட்டுள்ளார். இவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சுதேஷ்பால் சிங் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் அவர் ராணுவ மேஜர் என்பதால் போலீசார் வழக்குப்பதிவு செய்ய மறுத்துள்ளனர். இதனையடுத்து சுதேஷ்பால் சிங் இது குறித்து குடியரசுத் தலைவருக்கு புகார் கடிதம் எழுதியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Uttar Pradesh Army Major cut off wife's finger after asking for dowry


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->