உ.பி.யில் சோகம்: கொடூர விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பலி!
UP car lorry collided accident 8 members killed
உத்திர பிரதேச மாநிலத்தில் கார் லாரி மீது மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வாராணசி - லக்னௌ நெடுஞ்சாலையில் ஜான்பூருக்கு சென்று கொண்டிருந்தபோது கார், லாரியின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் சிக்கிய 3 வயது குழந்தை பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறது.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சமத்துவ இடத்துக்கு விரைந்து சென்று சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் யோகி ஆதித்யநாத், படுகாயம் அடைந்த குழந்தைக்கு உரிய சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
English Summary
UP car lorry collided accident 8 members killed