சாலையில் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தில் திடீரென தீப்பிடிப்பு.! ஒருவர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


கர்நாடகாவில் சாலையில் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கர்நாடகா மாநிலம் மைசூரை சேர்ந்த சிவராமு மற்றும் ஆனந்த ராமையா ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் தாசரகுப்பா பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.

அப்பொழுது மாண்டியா அருகே சாலையில் சென்று கொண்டிருக்கும் போது இருசக்கர வாகனம் திடீரென தீப்பற்றி உள்ளது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த இருவரின் உடலிலும் தீ பற்றியதில் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் காயமடைந்த இருவரையும் அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதில் சிவராமு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, இருசக்கர வாகனம் தீப்பற்றியதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Twowheeler fire in Karnataka


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->