ஈரோடு || மதுகுடிக்க கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கேட்ட வாலிபர்கள் - போலீசார் அதிரடி.!  - Seithipunal
Seithipunal


ஈரோடு || மதுகுடிக்க கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கேட்ட வாலிபர்கள் - போலீசார் அதிரடி.! 

ஈரோடு மாவட்டம் பெரியவலசு வள்ளியம்மை முதல் வீதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் தனது நண்பர் ஒருவருடன் ஈரோடு சூளை மதுபானக் கடை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அந்த வழியாக வந்த இரண்டு வாலிபர்கள் சுரேஷ்குமாரை தடுத்து நிறுத்தி மது குடிப்பதற்காக பணம் கேட்டு கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். ஆனால், சுரேஷ்குமார் பணம் தருவதற்கு மறுத்து கூச்சல் போட்டதால் அந்த வாலிபர்கள் இரண்டு பேரும் அங்கிருந்து தப்பித்துச் சென்றனர்.

இதைத்தொடர்ந்து சுரேஷ்குமார் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், சுரேஷ்குமாரிடம் பணம் கேட்டு கத்தியை காட்டி மிரட்டியது ஈரோடு நாராயணவலசு திருமால் நகரை சேர்ந்த ரவி மற்றும் மாணிக்கம்பாளையம் வீட்டு வசதி வாரியம் பகுதியை சேர்ந்த வாலிபர் என்பது தெரியவந்தது. 

இதையடுத்து, போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து இரண்டு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மதுகுடிப்பதற்காக வாலிபர்கள் இரண்டு பேர் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two youths arrested for threat asking money for drinking in erode


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->