அதிகாலையிலேயே அதிர்ச்சி - உ.பியில் இடிந்து விழுந்த கட்டிடம் - 2 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


அதிகாலையிலேயே அதிர்ச்சி - உ.பியில் இடிந்து விழுந்த கட்டிடம் - 2 பேர் பலி.!

உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள பாராபங்கி மாவட்டத்தில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்று இன்று அதிகாலை மூன்று மணியளவில் திடீரென இடிந்து விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஏராளமானோர் சிக்கி கொண்டனர். 

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு 
விரைந்து வந்து உள்ளூர் வாசிகளின் உதவியுடன் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பு பணியில் ஈடுபட்டனர். 

இந்த சம்பவம் குறித்து பாராபங்கி போலீஸ் சூப்பிரண்டு தினேஷ் குமார் சிங் தெரிவித்ததாவது, "அதிகாலை மூன்று மணியளவில் பாராபங்கியில் கட்டிடம் இடிந்து விழுந்தது என்று எங்களுக்கு தகவல் கிடைத்தது. 

அதைக்கேட்ட உடனே நாங்கள் சம்பவ பகுதியில் இருந்து 12 பேரை மீட்டுள்ளோம். இடிபாடுகளுக்குள் இன்னும் 4 பேர் சிக்கியிருக்க கூடும் என்று எங்களுக்கு தெரிவித்துள்ளனர். இந்த மீட்புப் பணியில் உத்தர பிரதேச மாநில பேரிடர் மீட்பு படையை சேர்ந்த குழுவினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

தேசிய பேரிடர் மீட்பு படையினரும் விரைவில் வரவுள்ளனர். மீட்கப்பட்ட 12 பேரும் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இருப்பினும், அவர்களில் 2 பேர் உயிரிழந்து விட்டனர்" என்றுத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two peoples died for building collapse in uttar pradesh


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->