ஆந்திரா : விபத்துக்குள்ளான பயிற்சி விமானம்.. தமிழக பெண் விமானி உட்பட இருவர் உயிரிழப்பு..! - Seithipunal
Seithipunal


பயிற்சி விமானம் நொறுங்கி விழுந்த விபத்தில் தமிழக பெண் விமானி உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆந்திர மாநிலத்தில் ஹைத்ராபாத்தை சேர்ந்த பிளை ஏவியேஷன் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் விமான நிறுவனத்திற்கு சொந்தமான பயிற்சி விமானம் குண்டூர் பகுதியில் இருந்து சென்ற போது தெலங்கானாவின் நல்கொண்டா பகுதியில் விழுந்தது.

வயல்வெளி பகுதியில் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. விமானம் கொழுந்து விட்டு எரிந்தால் அங்கிருந்தவர்கள் உடனடியாக தீயணைப்புதுறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் விமானத்தில் சிக்கிய விமானிகளை மீட்டனர்.

அதில், ஒரு விமானி தமிழகத்தை சேர்ந்த  விமானி மகிமா என்பது தெரியவந்தது. மேலும், அவருடன் பயணித்த மற்றோரு விமானியும் உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில்உயிர் அழுத்த மின் கம்பிகளில் மோதி கீழே விழுந்து இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Two killed in Tamil Nadu plane crash


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->