திரிபுராவில் ஆட்சி அமைக்க போவது யார்? - பாஜகாவை வீழ்த்துமா காங்கிரஸ் கூட்டணி? - Seithipunal
Seithipunal


60 தொகுதிகளைக் கொண்ட திரிபுரா மாநிலத்தில் 31 இடங்களை வெல்பவர்கள் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும். இந்த நிலையில் இந்த மாநிலத்திற்கு கடந்த பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. 

இதில், ஆளும் கட்சியான பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் காட்சிகள் கூட்டணி அமைத்தும், மம்தாவின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தனித்து நின்றும் போட்டியிட்டுள்ளது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதல் தொடங்கி மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

வாக்கு எண்ணிக்கை தொடங்கிய ஒன்றரை மணி நேரத்தில் தொடர்ந்து ஆளும் கட்சியான பாஜக முன்னிலை பெற்று வருகிறது. மற்ற கூட்டணி கட்சிகளும் விடாது பின்தொடர்ந்த வண்ணம் உள்ளது.

காலை 10.00 மணி நிலவரப்படி:-

பாஜக 32 இடங்கள் பிடித்து முதல் இடத்திலும்,

இடது சாரி 14 இடங்கள் பிடித்து இரண்டாவது இடத்திலும்,

டிப்ரோ மோத்தா கட்சி 9 இடங்கள் பிடித்து மூன்றாவது இடத்திலும்,

காங்கிரஸ் 6 இடங்கள் பிடித்து நான்காவது இடத்திலும் இருந்து வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tripura assembly election result


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->