கனமழை காரணமாக நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.!
tomorrow holiday for puducherry schools reason of heavy rain
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவ மழை மீண்டும் தீவிரமடைந்து கடந்த இரண்டு நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது,
இந்த மழையானது, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. என்றும் ஓரிரு இடங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்யக்கூடும். இந்த மழை இன்னும் இரண்டு நாட்களுக்கு தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், புதுச்சேரியில் நேற்றிரவு முதல் தற்போது வரை கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக புதுச்சேரியில் உள்ள பள்ளிகளுக்கு நாளை(திங்கட்கிழமை)
விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கனமழை பெய்வதால் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும் கல்லூரிகள் வழக்கம் போல என தெரிவிக்கப்ட்டுள்ளது.
English Summary
tomorrow holiday for puducherry schools reason of heavy rain