ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்கும் இந்தியா.! 100 நினைவுச் சின்னங்கள் வண்ண விளக்குகளால் ஒளிர ஏற்பாடு.! - Seithipunal
Seithipunal


இந்தோனேசியாவில் கடந்த மாதம் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் ஜி-20 அமைப்பின் விதிமுறைகளின்படி, அடுத்தாண்டு ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பின் படி, இன்று டிசம்பர் 1 ம் தேதி அதிகாரப்பூர்வ முறைப்படி ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்கிறது.

இதன் காரணமாக, இந்தியா முழுவதும் உள்ள நினைவுச் சின்னங்களை அலங்கார வண்ண விளக்குகளால் ஒளிர விடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், தஞ்சை பெரிய கோவில் உள்பட நாடு முழுவதும் 100 நினைவுச் சின்னங்களை ஜி-20 லோகோவால் ஒளிரச் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

இதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் ஐம்பது நகரங்களில் இருநூறுக்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. மேலும், அடுத்த ஆண்டு செப்டம்பர் ஒன்பது மற்றும் பத்து தேதிகளில் ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today india take leadership for G20 organization


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->