மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை - வடமாநில இளைஞர்கள் 2 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஐதராபாத்தில் கொரியர் சர்வீஸ் மூலம் கஞ்சா சாக்லேட்டுகளை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதும், கடைகளில் விற்பனை செய்யப்படுவதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

அந்தத் தகவலின் படி, போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ஐதராபாத்தில் இரண்டு இடங்களில் உள்ள கடைகள் மற்றும் குடோன்களில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். 

அந்த சோதனையின் போது, 21,000 கிலோ கஞ்சா சாக்லேட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், கஞ்சா சாக்லேட் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட பீகாரைச் சேர்ந்த இருவரையும் கைது செய்தனர்.

அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஐதராபாத்தில் 21 ஆயிரம் கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

to peoples arrested for drugs sales in hydrabad


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->