மிக கனமழை எச்சரிக்கை - மாவட்ட நிர்வாகங்களுக்கு தமிழக அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு!
TNGovt Alert For Heavy Rain IMD
இன்று முதல் ஐந்து நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அதன்படி, வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது காரணமாக, 19,20, 21, 22 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
நவ.21, 22 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
நவ. 19,20 ஆகிய தேதிகளில் வட தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
நாளை 20 ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
வருகின்ற 20ஆம் தேதி வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில், கனமழையை எதிர்கொள்ள தயாராகுமாறு மாவட்ட நிர்வாகிகளுக்கு தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை உத்தரவு பிறப்பு உள்ளது.
English Summary
TNGovt Alert For Heavy Rain IMD