திருப்பதி ஏழுமலையான் கோவில்.. பனை ஓலையில் லட்டு பிரசாதம்.. தேவஸ்தானம் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக சென்று வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய்த்தொற்றுக்குப் பிறகு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.

அந்த வகையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு தரிசனம் மற்றும் இலவச தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 80 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர்.

சாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்க 50 கவுண்டர்கள் செயல்பட்டு வருகின்றன. ஆனாலும் பக்தர்கள் கூட்டத்தால் 50 கவுண்டர்களிலுமே பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கிறது. அதனால் பக்தர்கள் எளிதில் கூட்ட நெரிசலின்றி லட்டு பிரசாதம் வாங்குவதற்காக மேலும் 30 கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது.

 இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதத்தை பக்தர்கள் கொண்டு செல்ல, பனை மர ஓலையிலான கூடை பயன்பாட்டுக்கு வரும் என  திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி தர்மா ரெட்டி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirupati Eyumalayan Temple Laddu Prasadam on Palm Leaf


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->