டிக்-டாக் வீடியோ மூலம் தந்தை மகன் சேர்ந்த கதை.! ருசிகர சம்பவம்.!
tiktok joining son and father
பல்வேறு தரப்பினரும் தற்பொழுது டிக் டாக் சமூக வலைத்தளத்தில் வீடியோவினை பதிவிட்டு ஆடல்,பாடல் என தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் பல்வேறு நிகழ்வுகள் டிக்டாக் செயலி மூலம் நடந்தது. இதன் காரணமாக பலரும் வாழ்க்கையை தொலைத்த சம்பவமும் அரங்கேறியது.
இந்த நிலையில் தற்போது டிக்டாக் வீடியோ மூலம் காணாமல் போன தந்தையைக் கண்டு பிடித்து இருக்கின்றார் ஒரு இளைஞர். ஆந்திர மாநிலத்தில் இருக்கும் கர்னூல் மாவட்டத்தில் நந்திலாயா பகுதியைச் சேர்ந்த புள்ளையா என்பவர் தன்னுடைய குடும்பத்தினருடன் சண்டை போட்டுக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி இருக்கின்றார்.
அவர் சென்ற இடம் குறித்து எவருக்கும் தெரியவில்லை. அவருடைய குடும்பத்தினர் அவரை தேடி வந்த நிலையில், அவருடைய மகன் நரசிம்மலு தந்தையின் புகைப்படத்தை டிக்டாக்கில் வீடியோ ஒன்று செய்து பதிவிட்டு இருந்தார்.
இந்த வீடியோவை பார்த்த நரசிம்மலுவின் தந்தை மகனுக்கு டிக்டாக் மூலமாக பதில் அளித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து அவர் இருப்பிடத்தை கண்டுபிடித்து அவரை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.
English Summary
tiktok joining son and father